×

போக்குவரத்து போலீசாருக்கு தர்பூசணி, மோர் பாக்கெட்

கிருஷ்ணகிரி, மே 6: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக கடுமையான வெயில் வாட்டி வருகிறது. பகல் முழுவதும் வெப்பக் காற்று வீசுவதால், சாலையில் செல்வோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்நிலையில், பொதுமக்களுக்காக பல்வேறு கட்சியினர் தண்ணீர் பந்தலை திறந்து வரும் நிலையில், கொளுத்தும் வெயிலில், சாலையில் நின்று போக்குவரத்தை சீர் செய்யும் போலீசாரின் தாகத்தை தணிக்கும் வகையில், நேற்று கிருஷ்ணகிரி 5ரோடு ரவுண்டானா அருகில், டிஎஸ்பி தமிழரசி, போக்குவரத்து போலீசாருக்கு தர்பூசணி, மோர் பாக்கெட், நன்னாரி சர்பத், வெள்ளரி பிஞ்சு ஆகியவற்றை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், போக்குவரத்து பிரிவு எஸ்எஸ்ஐ அனந்தநாராயணன், ரைட்டர் முருகேசன் மற்றும் போலீசார் ஆனந்தன், முருகேசன், பிரபு, பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post போக்குவரத்து போலீசாருக்கு தர்பூசணி, மோர் பாக்கெட் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Dinakaran ,
× RELATED ஆடு, மாடு, கோழிகளுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்க தடுப்பு முறைகள்